இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் சதாசிவ் பாட்டீல் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 86.
தூக்கத்தில் சதாசிவ் பாட்டீலின் உயிர் பிரிந்ததாக கோலாபூர் கிரிக்கெட் சங்க நிர்வாகி ரமேஷ் கடம் தகவல் தெரிவித்துள்ளார். சதாசிவுக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளார்கள்.
1955-ல் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் விளையாடியுள்ளார் சதாசிவ். அந்த ஆட்டத்தில் 14 ரன்களும் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். அதன்பிறகு இந்திய அணியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.
மஹாராஷ்டிர அணிக்காக 36 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 866 ரன்களும் 83 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ரஞ்சி கோப்பையில் மஹாராஷ்டிர அணியின் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.