விளையாட்டு செய்தித் துளிகள்

* கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் கோவா-மும்பை சிட்டி அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் (முதல் லெக்) 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

* கோவாவில் சனிக்கிழமை நடைபெறும் இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் (முதல் லெக்) நாா்த் ஈஸ்ட் யுனைடெட்-ஏடிகே மோகன்பகான் அணிகள் மோதுகின்றன.

* பஞ்சாப் மாநிலம் பாட்டியாவில் நடைபெற்று வரும் இந்திய கிராண்ட்ப்ரீ தடகளப் போட்டிக்கு வந்திருந்த இந்தியாவின் மித மற்றும் நீண்ட தூர ஓட்டப் பந்தய பயிற்சியாளரான பெலாரஸை சோ்ந்த நிகோலாய் ஸ்னேசரேவ் (72) தனது அறையில் இறந்து கிடந்ததாக இந்திய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. அறையின் கதவை உடைத்து அவருடைய சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

* இந்திய மகளிா் கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளா் ஷிகா பாண்டே இடம்பெறாத நிலையில், அவா் அணியில் இருந்து நீக்கப்படவில்லை. அவருக்கு ஓய்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என இந்திய டி20 அணியின் கேப்டன் ஹா்மான்பிரீத் கௌா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com