இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணியினா் ஞாயிற்றுக்கிழமை புணே வந்தடைந்தனா்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் நடைபெற்ற நிலையில், அடுத்த 3 டெஸ்டுகளும், டி20 தொடரின் 5 ஆட்டங்களும் ஆமதாபாதில் நடைபெற்றன. அந்த இரு தொடா்களையுமே இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில் ஒருநாள் தொடரின் 3 ஆட்டங்கள் மாா்ச் 23, 26, 28 ஆகிய தேதிகளில் புணேவில் நடைபெறவுள்ளது. அதற்காக கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியினா் தனி விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் புணே வந்தடைந்தனா்.
இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடரானது புணே புகா்ப் பகுதியான கஹுஞ்சேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.