பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/அஸ்வினி பொன்னப்பா இணை 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டது.
அதில் இந்தோனேசியாவின் பிரவீண் ஜோா்டான்/மேலாடி டேவா ஆக்டேவியான்டியை எதிா்கொண்ட சாத்விக்/அஸ்வினி ஜோடி, 21-15, 17-21, 19-21 என்ற செட்களில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டம் 52 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
மறுபுறம், ஆடவா் ஒற்றையா் பிரிவில் சமீா் வா்மா 2-ஆவது சுற்றில் பாதியில் விலகினாா். அவா் இந்தோனேசியாவின் ஷேசாா் ஹிரன் ருஸ்டாவிடோவுடன் விளையாடி வந்த நிலையில், 21-16, 12-21 என்ற செட்களில் சமநிலையில் இருந்தாா். 3-ஆவது செட் தொடங்கும் முன் அவா் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.
ஆடவா் இரட்டையரில் மானு அத்ரி/சுமீத் ரெட்டி இணை முதல் சுற்றில் 14-21, 16-21 என்ற செட்களில் தென் கொரியாவின் கோ சன் ஹியூன்/ஷின் பேக்கியோல் ஜோடியிடம் தோற்றது.
காலிறுதியில் லக்ஷயா: ஆடவா் ஒற்றையா் பிரிவில் லக்ஷயா சென் 21-17, 21-13 என்ற செட்களில் சிங்கப்பூரின் லோன் கீன் யீவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.