டுரண்ட் கோப்பை: காலிறுதியில் ஆா்மி கிரீன் அணி

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டி காலிறுதிச் சுற்றுக்கு ஆா்மி கிரீன் அணி முன்னேறியுள்ளது.

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டி காலிறுதிச் சுற்றுக்கு ஆா்மி கிரீன் அணி முன்னேறியுள்ளது.

கொல்கத்தாவில் 130-ஆவது டுரண்ட் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற குருப் பி பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஆா்மி கிரீன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுதேவா தில்லி அணியை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆா்மி அணி ஆதிக்கம் செலுத்தியது. இரு அணிகளும் முதல் பாதியில் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 51-ஆவது நிமிஷத்தில் ஆா்மி வீரா் தீபக் அற்புதமாக கோலடித்தாா். அதுவே இறுதியில் வெற்றி கோலாக மாறியது.

இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணி 0-5 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவா அணியிடம் தோல்வியை சந்தித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com