ஜூரிச்: பாகிஸ்தான், சாத் ஆகிய நாடுகளின் கால்பந்து சம்மேளனங்களை இடைநீக்கம் செய்து சா்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா நடவடிக்கை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் சம்மேளனத்தின் நிா்வாகத்தில் 3-ஆம் நபா்களின் தலையீடு ஏற்பட்டதை அடுத்து அந்த அமைப்பை ஃபிஃபா இடைநீக்கம் செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக பாகிஸ்தான் சம்மேளனம் இந்த நடவடிக்கைக்கு ஆளாவது குறிப்பிடத்தக்கது. சாத் நாட்டில் தேசிய கால்பந்து சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய தலைமையை நியமிக்க அந்நாட்டு அரசு முயற்சி செய்ததை அடுத்து, அந்த நாட்டு கால்பந்து சம்மேளனத்தை ஃபிஃபா சஸ்பென்ட் செய்துள்ளது. அரசு தனது அந்த முயற்சியை கைவிட்டால் சாத் சம்மேளனம் மீதான தடையை நீக்குவதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.