தீபக் சஹார் மிரட்டல் பந்துவீச்சு: சென்னைக்கு 107 ரன்கள் இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 106 ரன்கள் சேர்த்தது.
தீபக் சஹார் மிரட்டல் பந்துவீச்சு: சென்னைக்கு 107 ரன்கள் இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 106 ரன்கள் சேர்த்தது.

14-வது ஐபிஎல் சீசனின் 8-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் எந்த மாற்றமுமின்றி கடைசி ஆட்டத்தில் விளையாடிய அணியுடன் களமிறங்கின.

பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் ஏமாற்றினர். மயங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காமலும், ராகுல் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் இறங்கிய கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் ஆகியோரும் பஞ்சாப் அணிக்கு கைகொடுக்கவில்லை.

கெயில் 10, ஹூடா 10, பூரன் 0 என அடுத்தடுத்து வெளியேறினர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாருக்கான் மட்டும் சிறப்பாக விளையாடினார். அவர் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியின் ரன்ரேட் உயர உதவினார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

சென்னை அணியில் அபாரமாக பந்துவீசிய தீபக் சஹார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com