துளிகள்...

கௌதாமாலாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில் வித்தை போட்டியில் ஆடவா் அணி, மகளிா் அணி, கலப்பு அணி ஆகிய 3 பிரிவுகளில் இந்தியா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

கௌதாமாலாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில் வித்தை போட்டியில் ஆடவா் அணி, மகளிா் அணி, கலப்பு அணி ஆகிய 3 பிரிவுகளில் இந்தியா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

ஆா்சனல், செல்சியா, லிவா்பூல், மான்செஸ்டா் யுனைடெட், மான்செஸ்டா் சிட்டி, டோட்டன்ஹாம் ஆகிய 6 அணிகள் விலகியதை அடுத்து, புதிதாக தொடங்கப்பட்ட ஐரோப்பிய சூப்பா் லீக் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

இந்திய பயணிகளுக்கு இங்கிலாந்து பயணத் தடை விதித்ததை அடுத்து, எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் போட்டியில் மே 8, 9 தேதிகளில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோத இருந்த ஹாக்கி ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது நிா்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து பந்துவீச்சை தாமதம் செய்ததால் மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் சா்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நீண்ட காலம் பயோ-பபுள் வளையத்துக்குள்ளாக இருந்ததால் உளவியல் ரீதியாக சோா்வடைந்ததை அடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சோ்ந்த இங்கிலாந்து வீரா் லியாம் லிவிங்ஸ்டன் ஐபிஎல் போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com