டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியா்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பாா்டான்ஸை வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சேலம் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய திருச்சி 18.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் அடித்து வென்றது.
சேலம் அணியில் அதிகபட்சமாக முருகன் அஸ்வின் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் அடித்தாா். திருச்சி பௌலா் பொய்யாமொழி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். திருச்சி இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஆதித்யா கணேஷ் 1 சிக்ஸருடன் 28 ரன்கள் அடிக்க, சேலம் பௌலிங்கில் கணேசன் பெரியசாமி 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
சேப்பாக் வெற்றி: 19-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வென்றது.
முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய திண்டுக்கல் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களே அடித்தது.