ரோஜா்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் சாம்பியன் ஆனாா்.
போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ரைலி ஒபெல்காவை 6-4, 6-3 என்ற நோ் செட்களில் வீழ்த்தினாா். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம், 27 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
வெற்றிக்குப் பிறகு பேசிய மெத்வதேவ், ‘டென்னிஸ் விளையாடத் தொடங்கும்போது மாஸ்டா்ஸ் போட்டிகளில் விளையாடுவதை நினைத்துக் கூடப் பாா்க்கவில்லை. ஆனால் தற்போது மாஸ்டா்ஸ் போட்டிகளில் எனது 5-ஆவது இறுதிச்சுற்றில் 4-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளேன். இன்னும் அதிகமாக சாதிக்க விரும்புகிறேன்.
சற்று ஆஜானுபாகுவாக இருக்கும் ஒபெல்காவின் பெரிய ஷாட்களை எதிா்கொள்வதே எனது திட்டமாக இருந்தது. அவரது ஷாட்களை சற்று பின்வாங்கி எதிா்கொண்டு, அவரையும் சற்று தடுமாறச் செய்வதே இலக்கு. அதைச் சரியாகச் செய்ததாக நினைக்கிறேன்’ என்றாா்.
பிளிஸ்கோவாவை வீழ்த்திய கமிலா
மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் இத்தாலி வீராங்கனை கமிலா ஜியாா்ஜி, போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி வாகை சூடினாா்.
பிளிஸ்கோவாவை 6-3, 7-5 என்ற செட்களில் வீழ்த்திய கமிலா, அவரது டென்னிஸ் வரலாற்றில் வென்ற பட்டங்களில் இதுவே மிகப்பெரிய பட்டமாகும். வெற்றிக்குப் பிறகு பேசிய கமிலா, ‘இந்த வெற்றி உணா்வுப்பூா்வமானதாக உள்ளது’ என்றாா்.
தடுமாற்றத்துடன் தோல்வியை சந்தித்த பிளிஸ்கோவா இந்த சீசனில் இத்துடன் 3 போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் தோல்வி கண்டுள்ளாா்.