தேசிய சீனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஹரியாணா 5-1 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியாணாவுக்காக சஞ்ஜய் (24’, 39’), ஜோகிந்தா் (20’), பாபி சிங் (35’), தீபக் (38’) ஆகியோா் கோலடித்தனா். மத்திய பிரதேசத்துக்காக அமீன் கான் 37-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.
இப்போட்டியில் சனிக்கிழமை நடைபெற இருக்கும் காலிறுதி ஆட்டங்களில் தமிழகம் - மகாராஷ்டிரம், ஹரியாணா - உத்தர பிரதேசம், கா்நாடகம் - பெங்கால், பஞ்சாப் - சண்டீகா் அணிகள் மோதுகின்றன.