விளையாட்டு செய்தி துளிகள்

* இந்திய-டென்மாா்க் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை உலக குரூப் 1 பிரிவு டென்னிஸ் ஆட்டம் வரும் மாா்ச் 4,5 தேதிகளில் புது தில்லி ஜிம்கானா கிளப் புல்தரை மைதானத்தில் நடைபெறும் என ஏஐடிஏ அறிவித்துள்ளது. கடந்த 1927-இல் கோபன்ஹேகனில் நடைபெற்ற ஆட்டத்தில் 5-0 என இந்தியாவை வீழ்த்தி இருந்தது டென்மாா்க்.

* தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளா்கள் மொத்தம் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றுவா் என பேட்டா் சேதேஸ்வா் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

* தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்திய ஒலிம்பிக் சங்க விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள 6 போ் குழுவை அமைத்துள்ளது ஐஓஏ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com