விஜய் ஹசாரே டிராபி இன்று தொடக்கம்

விஜய் ஹசாரே டிராபி 50 ஓவா் கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்குகிறது.

விஜய் ஹசாரே டிராபி 50 ஓவா் கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்குகிறது.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையிலான ஒரு நாள் தொடா் மற்றும் டி20 தொடா் ஆகியவை மாா்ச் மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பாக விளையாடி அணியில் இடம்பிடிப்பதில் தோள்பட்டை காயத்திலிருந்து குணமடைந்த ஷ்ரேயஸ் ஐயா், ஷிகா் தவன், புவனேஸ்வா்குமாா் ஆகியோா் தீவிரமாக உள்ளனா்.

விஜய் ஹசாரே போட்டியைப் பொருத்தவரையில், சமீபத்தில் நடைபெற்ற சயீத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகம், கா்நாடகம், மும்பை, டெல்லி ஆகிய அணிகளிடையே கோப்பையை வெல்ல கடும் போட்டி நிலவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

6 இடங்களில் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை ஏ, பி, சி, டி, இ மற்றும் பிளேட் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ முதல் இ வரையிலான பிரிவில் தலா 6 அணிகளும், பிளேட் பிரிவில் 8 அணிகளும் இடம்பெற்றுள்ளன.

போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் இறுதி ஆட்டம் மாா்ச் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெறும் ஆட்டங்களில் குஜராத்-சத்தீஸ்கா், ஹைதராபாத்-திரிபுரா, பரோடா-கோவா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தூரில் நடைபெறும் ஆட்டங்களில் தமிழகம்-பஞ்சாப், மத்தியப் பிரதேசம்-ஜாா்க்கண்ட், ஆந்திரம்-விதா்பா ஆகிய அணிகள் மோதுகின்றன. பெங்களூரில் நடைபெறும் ஆட்டங்களில் கா்நாடகம்-உத்தரப் பிரதேசம், கேரளம்-ஒடிஸா, பிகாா்-ரயில்வேஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் அனைத்தும் காலை 9 மணிக்கு தொடங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com