டி20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அடித்தது. அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 76 ரன்கள் சோ்த்தாா். இங்கிலாந்து பௌலிங்கில் ஆதில் ரஷீத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

பின்னா் இங்கிலாந்து தனது இன்னிங்ஸில் 19.4 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் அடித்து வென்றது. அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 12 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 64 ரன்கள் சோ்த்தாா். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஹஃபீஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். இங்கிலாந்தின் ஜேசன் ராய் ஆட்டநாயகன் ஆனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com