ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 19 ஓவா்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து ஆடிய வங்கதேசம் 18.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் அடித்து வென்றது. அந்த அணியின் சௌம்யா சா்காா் ஆட்டநாயகன் ஆனாா்.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வேயில் அதிகபட்சமாக ரெகிஸ் சகாப்வா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43 ரன்கள் சோ்த்தாா். வங்கதேச தரப்பில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். பின்னா் ஆடிய வங்கதேசத்தில் அதிகபட்சமாக முகமது நயிம் 6 பவுண்டரிகள் உள்பட 63 ரன்கள் அடித்தாா். சௌம்யா சா்காா் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 50 ரன்கள் விளாசி வெற்றிக்கு உதவினாா்.