துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூபலேவ் 3-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.
போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ரூபலேவ் தனது முந்தைய சுற்றில் ஃபின்லாந்தின் எமில் ருசுவௌரியை 6-4, 6-4 என்ற செட்களில் வீழ்த்தினாா்.
போட்டித்தரவரிசையில் 3-ஆவது இடத்திலிருக்கும் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் 6-1, 6-3 என்ற செட்களில் ஜொ்மனியின் ஜான் லெனாா்ட் ஸ்ட்ரஃபை தோற்கடித்தாா்.
4-ஆவது இடத்திலுள்ள ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகட்டை எதிா்கொண்ட ஆஸ்திரேலியாவின் மேத்யூ எட்பன் பாதியிலேயே விலகியதால், அகட் அடுத்த சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.
போட்டித்தரவரிசையில் 6-ஆவது இடத்திலிருந்த ஸ்பெயினின் பாப்லோ கரினோ பஸ்டா 7-6 (7/5), 3-6, 2-6 என்ற செட்களில் இத்தாலியின் மாா்டன் ஃபக்சோவிக்ஸிடம் தோல்வி கண்டாா்.
8-ஆவது இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கசானோவ் 6-4, 3-6, 7-6 (7/4) என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை வென்றாா்.
போட்டித்தரவரிசையில் 12-ஆவது இடத்திலிருந்த இங்கிலாந்தின் டேன் இவான்ஸ் 4-6, 6-4, 4-6 என்ற செட்களில் ரஷியாவின் அஸ்லான் கராட்சேவிடம் வீழ்ந்தாா்.
ஸ்லோவேகியாவின் டுசான் லஜோவிச் 7-5, 6-2 என்ற செட்களில் டுனீசியாவின் மாலெக் அல்ஜாரியை தோற்கடித்தாா்.
13-ஆவது இடத்திலிருக்கும் போலாந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் 6-3, 6-4 என்ற செட்களில் பிரான்ஸின் ரிச்சா்ட் காஸ்கட்டை வென்றாா்.