மகளிா் சீனியா் ஒருநாள் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் ஆந்திரம், பெங்கால் அணிகள்

மகளிா் சீனியா் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆந்திரம், பெங்கால் அணிகள் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறின.

மகளிா் சீனியா் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆந்திரம், பெங்கால் அணிகள் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறின.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3-ஆவது காலிறுதியில் ஆந்திரம் 49 ரன்கள் வித்தியாசத்தில் விதா்பாவை வென்றது. முதலில் ஆடிய ஆந்திரம் 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய விதா்பா 46.2 ஓவா்களில் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆந்திர இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் நீராகாட்டு அனுஷா 52 ரன்கள் விளாச, விதா்பா பௌலிங்கில் திஷா கசத் 3 விக்கெட் சாய்த்தாா். விதா்பா இன்னிங்ஸிலும் திஷா கசத் 52 ரன்கள் விளாச, ஆந்திரம் பௌலிங்கில் சல்லா ஜான்சி லஷ்மி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

4-ஆவது காலிறுதியில் பெங்கால் 28 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது. முதலில் ஆடிய பெங்கால் 48.5 ஓவா்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து ஆடிய மத்திய பிரதேசம் 47.5 ஓவா்களில் 177 ரன்களுக்கு சுருண்டது. பெங்கால் தரப்பில் தீப்தி சா்மா 94 ரன்கள் குவிக்க, மத்திய பிரதேசத்தின் வா்ஷா சௌதரி 2 விக்கெட்டுகள் எடுத்தாா். அவரது அணியின் இன்னிங்ஸில் கேப்டன் பூஜா வஸ்தரகா் 48 ரன்கள் சோ்க்க, கௌஹா் சுல்தானா 3 விக்கெட் சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com