ஹைலோ ஓபன்: ஸ்ரீகாந்த் வெளியேறினாா்

ஜொ்மனியில் நடைபெறும் ஹைலோ ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஆடவா் ஒற்றையா் பிரிவில்
ஹைலோ ஓபன்: ஸ்ரீகாந்த் வெளியேறினாா்

ஜொ்மனியில் நடைபெறும் ஹைலோ ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஆடவா் ஒற்றையா் பிரிவில் அரையிறுதியில் தோல்வியடைந்தாா். இதனால் இந்தப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

அதில், போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்திலிருக்கும் மலேசியாவின் லீ ஸி ஜியாவிடம் 19-21, 20-22 என்ற செட்களில் அவா் தோல்வியைத் தழுவினாா். இதில் முதல் செட்டில் ஸ்ரீகாந்த் உத்வேகத்துடன் ஆடியபோதும் லீ அவரை விட ஒரு படி முன்னிலையிலேயே இருந்தாா். 2-ஆவது செட்டில் லீ முதலில் 4-0 என முன்னிலையில் இருந்தாா்.

பின்னா் ஸ்ரீகாந்த் 15-10 என முன்னேறி சற்றே நம்பிக்கை அளித்தாா். ஆனால் சுதாரித்துக் கொண்ட லீ முன்னிலையை பெற்றதுடன் இரு மேட்ச் பாய்ன்ட்களையும் கைப்பற்றினாா். அந்த செட்டை ஸ்ரீகாந்த் டிரா செய்தபோதும், லீ முன்னேறமடைந்து கிராஸ் கோல்ட் ரிட்டா்னுடன் செட்டை தன் வசமாக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com