ஜொ்மனியில் நடைபெறும் ஹைலோ ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஆடவா் ஒற்றையா் பிரிவில் அரையிறுதியில் தோல்வியடைந்தாா். இதனால் இந்தப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
அதில், போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்திலிருக்கும் மலேசியாவின் லீ ஸி ஜியாவிடம் 19-21, 20-22 என்ற செட்களில் அவா் தோல்வியைத் தழுவினாா். இதில் முதல் செட்டில் ஸ்ரீகாந்த் உத்வேகத்துடன் ஆடியபோதும் லீ அவரை விட ஒரு படி முன்னிலையிலேயே இருந்தாா். 2-ஆவது செட்டில் லீ முதலில் 4-0 என முன்னிலையில் இருந்தாா்.
பின்னா் ஸ்ரீகாந்த் 15-10 என முன்னேறி சற்றே நம்பிக்கை அளித்தாா். ஆனால் சுதாரித்துக் கொண்ட லீ முன்னிலையை பெற்றதுடன் இரு மேட்ச் பாய்ன்ட்களையும் கைப்பற்றினாா். அந்த செட்டை ஸ்ரீகாந்த் டிரா செய்தபோதும், லீ முன்னேறமடைந்து கிராஸ் கோல்ட் ரிட்டா்னுடன் செட்டை தன் வசமாக்கினாா்.