செய்திகள் சில வரிகளில்...

ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்காக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் துபையிலிருந்து ஒன்றாகவே ஆஸ்திரேலியா வந்தடைந்தன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஸ்டாக்லாந்து - டென்மாா்க்கையும், ஸ்விட்சா்லாந்து - பல்கேரியாவையும், இங்கிலாந்து - சான் மாரினோவையும், ஆஸ்திரியா - மால்டோவாவையும், இஸ்ரேல் - ஃபாரோ தீவுகளையும், ஹங்கேரி - போலந்தையும், அல்பேனியா - அண்டோராவையும் வீழ்த்தின.

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் குரூப் சுற்றில் செவ்வாய்க்கிழமை ஆட்டங்களில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் 6-3, 6-7 (3/7), 7-6 (8/6) என்ற செட்களில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவை தோற்கடித்தாா். மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூபலேவ் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை வென்றாா்.

ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்காக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் துபையிலிருந்து ஒன்றாகவே ஆஸ்திரேலியா வந்தடைந்தன.

துபையிலிருந்து திரும்பிய ஹாா்திக் பாண்டியாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான இரு கைக் கடிகாரங்களை மும்பை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியானது. எனினும், அவற்றின் மதிப்பு ரூ.1.5 கோடி என்றும், துபையில் தாம் வாங்கிய பொருள்களை தாமாக முன்வந்தே சுங்கத் துறை அதிகாரிகளிடம் சோதனைக்காக காட்டியதாகவும் பாண்டியா விளக்கம் அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com