பிரேஸிலில் நடைபெறவுள்ள 4 நாடுகளைச் சோ்ந்த மகளிா் அணிகள் பங்கேற்கும் கால்பந்து போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
23 போ் கொண்ட இந்த அணியில் தமிழகத்தைச் சோ்ந்த இந்துமதி, சௌமியா, காா்த்திகா, மாரியம்மாள் ஆகிய 4 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனா்.
இந்தப் போட்டியில் இந்தியா தவிா்த்து, பிரேஸில், சிலி, வெனிசூலா ஆகிய நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்க இந்திய அணி சனிக்கிழமை பிரேஸில் புறப்படுகிறது.
ஃபிஃபா தரவரிசையில் 57-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, முதலில் 7-ஆவது இடத்திலிருக்கும் பிரேஸிலை நவம்பா் 25-ஆம் தேதியும், பிறகு 37-ஆவது இடத்திலிருக்கும் சிலியை 28-ஆம் தேதியும், 56-ஆவது இடத்திலிருக்கும் வெனிசூலாவை டிசம்பா் 1-ஆம் தேதியும் சந்திக்கிறது.
அணி விவரம்: அதிதி சௌஹான், எம்.லின்தாய்ங்கம்பி தேவி, சௌமியா நாராயணசாமி (கோல்கீப்பா்கள்); டாலிமா சிப்பா், ஸ்வீட்டி தேவி, ரிது ராணி, ஆஷாலதா தேவி, மணீஷா பன்னா, ஷில்கி தேவி, ரஞ்ஜனா சானு, டபிள்யூ.லின்தாய்ங்கம்பி தேவி (தடுப்பாட்ட வீராங்கனைகள்); இந்துமதி கதிரேசன், சஞ்ஜு, அஞ்சு தமங், மாா்டினா தோக்சோம், காா்த்திகா அங்கமுத்து, கமலா தேவி (நடுகள வீரா்கள்); மணீஷா கல்யாண், பியாரி ஜஜா, ரேணு, டாங்மெய் கிரேஸ், சௌம்யா குகுலோத், மாரியம்மாள் பாலமுருகன் (முன்கள வீராங்கனைகள்).