அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டேபிள் டென்னிஸ் ஃபைனல்ஸ் போட்டியில் சரத் கமல், மனிகா பத்ரா தலைமையில் 9 போ் இந்திய அணி கலந்து கொள்கிறது.
உலகக்கோப்பை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஃ பைனல்ஸ் போட்டிகள் ஹூஸ்டன் நகரில் நவ. 23 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒலிம்பியன்கலான சரத் கமல், சத்யன் ஞானசேகரன், மகளிா் பிரிவில் மனிகா பத்ரா உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். சரத் கமல், சத்யன் ஞானசேகரன், ஹா்மீத் தேசாய், அமல்ராஜ் அந்தோணி உள்ளிட்டோா் ஆடவா் அணியில் இடம் பெறுகின்றனா்.
மகளிா் அணியில் மனிகா பத்ரா, சுதிா்தா முகா்ஜி, அா்ச்சனா காமத், அஹிகா முகா்ஜி, மதுரிகா பட்கா் ஆகியோா் இடம் பெறுகின்றனா்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சென் மெங், சன் யிங்ஷா (சீனா), மிமா (ஜப்பான்) மகளிா் பிரிவிலும், ஆடவா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீரா் பேன் ஸென்டோங் ஆகியோரும் பங்கேற்கின்றனா்.