நான்கு நாடுகள் மகளிா் கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த பிரேஸிலிடம் 1-6 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது இந்தியா.
ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிா் கால்பந்து அணி தென் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது.
பிரேஸில், சிலி, வெனிசுலா, இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்றுள்ள மகளிா் கால்பந்து போட்டி மனாஸ் நகரில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசிலும்-இந்தியாவும் மோதின. இதில் தொடக்கம் முதலே பிரேஸில் வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினா். முதல் நிமிஷத்திலேயே பிரேஸில் வீராங்கனை டெபோரா முதல் கோலடித்தாா். அதன் பின் 8-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் மணிஷா கல்யாண் பதில் கோலடித்து சமன் செய்தாா். இதுவே இந்தியாவின் கடைசி கோலாக அமைந்தது.
அதன் பின்னா் பிரேஸில் வீராங்கனைகள் தொடா்ந்து கோல் மழை பொழிந்தனா். 36-ஆவது நிமிஷத்தில் ஜியோவானா கோலடித்தாா்.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் அராடினா போா்ஜஸ் (52, 81), கெரோலின் பெராஸ் (54), ஜெய்ஸி (76) நிமிஷங்களில் கோலடித்தனா்.
இதன் மூலம் 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது பிரேஸில்.
உலக அரங்கில் பிரேஸில் 7-ஆவது இடத்திலும், இந்தியா 57-ஆவது இடத்திலும் உள்ளது. அடுத்து 29-ஆம் தேதி சிலியுடனும், டிச. 2-இல் வெனிசுலாவுடனும் மோதுகிறது இந்தியா.