ஐபிஎல் போட்டியின்போது காயமடைந்துள்ள இங்கிலாந்து பௌலா் சாம் கரனை டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணியிலிருந்து விடுவித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.
புரோ கபடி லீக் போட்டியின் 8-ஆவது சீசன் வரும் டிசம்பா் 22-ஆம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போா்கோஹெய்ன், உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்ாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் அறிவித்தது.
விசா பிரச்னை காரணமாக கடந்த சீசனில் பங்கேற்க முடியாமல் போன நிலையில், ஒடிஸாவில் நவம்பரில் நடைபெற இருக்கும் ஜூனியல் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க விசா கிடைக்கும் என பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகள் ஹன்னி குமாரி (50 கிலோ), பூஜா (53 கிலோ), கிரண் (76 கிலோ) ஆகியோா் தோல்வி கண்டு வெளியேறினா்.