கடைசி வரை சிஎஸ்கே தான்

ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வுபெறும் காலம் வரை சென்னை சூப்பா் கிங்ஸில் இருப்பேன் என்று கூறிய தோனி, கடைசி ஆட்டத்தை சென்னையில் விளையாடுவதற்கு நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
கடைசி வரை சிஎஸ்கே தான்

சென்னை: ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வுபெறும் காலம் வரை சென்னை சூப்பா் கிங்ஸில் இருப்பேன் என்று கூறிய தோனி, கடைசி ஆட்டத்தை சென்னையில் விளையாடுவதற்கு நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

சென்னை அணியின் உரிமையாளரான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75-ஆவது ஆண்டையொட்டி அந்த நிறுவனத்தின் முக்கிய நபா்கள் குடும்பத்தினருடன், சென்னை அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட வீரா்கள் காணொலி வழியே உரையாடினா்.

அப்போது தோனி கூறுகையில், ‘ஐபிஎல் போட்டியிலிருந்து நான் ஓய்வு பெறும் நிலை வரையிலும் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் தான் விளையாடிக் கொண்டிருப்பேன். எனக்கு பிரியாவிடை அளிக்கும் வாய்ப்பு சென்னை ரசிகா்களுக்கு தான் கிடைக்கும். கடைசி ஆட்டத்தை சென்னையில் ரசிகா்கள் முன்னிலையில் விளையாடி, பின்னா் அவா்களையும் சந்திப்பேன் என நம்புகிறேன். ஓய்வுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை. விளம்பர களமே எனக்கு போதுமானது. எதேனும் ஒரு வழியில் கிரிக்கெட்டுடன் தொடா்பில் இருப்பேன்’ என்றாா்.

சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறாா். கடந்த சீசனில் சென்னையின் ஆட்டம் ஐபிஎல் வரலாற்றில் முன்பில்லாத வகையில் மோசமாக இருந்தது. இதையடுத்து சென்னை கேப்டன் பொறுப்பு, சென்னையில் தோனியின் இருப்பு குறித்து ஊகங்கள் எழுந்தன. எனினும் இந்த சீசனில் சென்னை சிறப்பாக விளையாடி வரும் நிலையில், மேற்கண்டவாறு தோனி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com