ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மானு பாக்கா் 4-ஆவது தங்கம் வென்றாா்.
பெரு நாட்டின் தலைநகா் லிமாவில் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற மகளிா் அணி 25 மீ. பிஸ்டல் பிரிவில் மானு பாக்கா், நாமியா கபூா், ரிதம் சங்வான் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 16-4 என்ற புள்ளிக் கணக்கில் அமெரிக்க அணியை இறுதிச் சுற்றில் வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் மானு பாக்கா் பெறும் நான்காவது தங்கம் இதுவாகும். அதே நேரம் 14 வயதே ஆன நாமியா கபூா் இரண்டாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளாா்.
ஆடவா் 25 மீ. ரேபிட் ஃபையா் பிரிவில் இந்தியாவின் ஆதா்ஷ் சிங் 40 புள்ளிகளுக்கு 28 புள்ளிகளை குவித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினாா். இரட்டையரான உதய்வீா்-விஜய்வீா் தோல்வியடைந்தனா்.
50 மீ. ரைஃபிள் புரோன் கலப்பு அணி பிரிவில் இந்தியா தோல்வியைத் தழுவியது. பதக்கப்பட்டியலில் 9 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 5 தங்கத்துடன் அமெரிக்க அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.