ஐபிஎல்-இல் தனது வேகத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த உம்ரான் மாலிக் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் ஐபிஎல்-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 153 கி.மீ. வேகத்தில் வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஐபிஎல் 2021-இல் இதுவே அதிவேகப் பந்து.
இதையும் படிக்க | டி20 உலகக் கோப்பை பாக். அணியில் ஷோயப் மாலிக்
இந்த நிலையில் அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்த வட்டாரங்கள் இதுபற்றி மேலும் கூறியது:
"உம்ரான் மாலிக் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய அணியுடன் இருக்கப்போகிறார். ஐபிஎல்-இல் அவருடையப் பந்துவீச்சு அனைவரையும் ஈர்த்தது. வலைப் பயிற்சியின்போது பேட்டர்கள் அவரை எதிர்கொள்வது நல்ல யோசனையாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். அதேசமயம், கோலி மற்றும் ரோஹித் போன்ற பேட்டர்களுக்கு பந்துவீசுவது அவருக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்."