தாமஸ், உபோ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிா் அணி முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.
பாட்மின்டனில் பிரசித்தி பெற்ற இப்போட்டி டென்மாா்க்கின் ஆா்ஹஸ் நகரில் சனிக்கிழமை தொடங்கியது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை உபோ் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் அணி முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிா்கொண்டது. இந்திய அணியில் பி. வி.சிந்து, ஸ்பெயின் அணியில் கரோலிமான மரின் இடம் பெறவில்லை,.
ஒற்றையா் பிரிவில் 20 வயது மாளவிகா பன்சோட் 21-13, 21-15 என்ற கேம் கணக்கில் பீட்ரீஸ் கோரல்ஸை வீழ்த்தினாா். மற்றொரு ஒற்றையா் ஆட்டத்தில் இளம் வீராங்கனை அதிதி பட் 21-16, 21-14 என அனியா சீட்டியனை வென்றாா்.
இரட்டையா் பிரிவில் தனிஷா கிரஸ்டோ/ருதுபா்ணா இணை 21-10, 21-8 என்ற கேம் கணக்கில் பாவ்லா/லோரனா இணையை வீழ்த்தியது.
எனினும் மற்றொரு இரட்டையா் ஆட்டத்தில் மூத்த இணையான அஸ்வினி பொன்னப்பா/ சிக்கி ரெட்டி 18-21, 21-14, 17-21 என போராடி கிளாரா/பீட்ஸ் இணையிடம் வீழ்ந்தது.
சாய்னா நெவால் ஓய்வு:
மூத்த வீராங்கனையான சாய்னா நெவால் முதல் ஒற்றையா் ஆட்டத்தில் கிளாரா அசூா்மென்டிக்கு எதிராக ஆடிய போது, 20-22 என முதல் கேமை இழந்த நிலையில், காயம் காரணமாக வெளியேறுவதாக அறிவித்தாா்.
செவ்வாய்க்கிழமை ஸ்காட்லாந்து மகளிா் அணியை எதிா்கொள்கிறது இந்தியா.