டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: பாட்மிண்டனில் தங்கம், வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள்

இந்தியாவுக்குக் கிடைத்துள்ள 4-வது தங்கப் பதக்கம். டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா ஒட்டுமொத்தமாக 17 பதக்கங்களை வென்றுள்ளது. 
பிரமோத் பகத்
பிரமோத் பகத்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பாட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப் பதக்கத்தையும் மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்கள்.

இன்று நடைபெற்ற ஆடவர் பாட்மிண்டன் எஸ்.எல். 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத், இறுதிச்சுற்றில் இங்கிலாந்தின் டேனியலை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 21-14, 21-17 என வென்று தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார் பிரமோத் பகத். 33 வயது பகத், ஒடிஷா மாநிலத்தின் புவனேஸ்வரைச் சேர்ந்தவர். 

பாட்மிண்டன் எஸ்.எல். 3 பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தை இந்தியாவின் மனோஜ் சர்க்கர் வென்றுள்ளார். ஜப்பான் வீரர் ஃபுஜிஹராவை 22-20, 21-13 என வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதனால் பாட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலம் என ஒரே நாளில் இரு பதக்கங்கள் கிடைத்துள்ளன. 

இது இந்தியாவுக்குக் கிடைத்துள்ள 4-வது தங்கப் பதக்கம். டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா ஒட்டுமொத்தமாக 17 பதக்கங்களை வென்றுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com