டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பாட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப் பதக்கத்தையும் மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்கள்.
இன்று நடைபெற்ற ஆடவர் பாட்மிண்டன் எஸ்.எல். 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத், இறுதிச்சுற்றில் இங்கிலாந்தின் டேனியலை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 21-14, 21-17 என வென்று தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார் பிரமோத் பகத். 33 வயது பகத், ஒடிஷா மாநிலத்தின் புவனேஸ்வரைச் சேர்ந்தவர்.
பாட்மிண்டன் எஸ்.எல். 3 பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தை இந்தியாவின் மனோஜ் சர்க்கர் வென்றுள்ளார். ஜப்பான் வீரர் ஃபுஜிஹராவை 22-20, 21-13 என வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதனால் பாட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலம் என ஒரே நாளில் இரு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இது இந்தியாவுக்குக் கிடைத்துள்ள 4-வது தங்கப் பதக்கம். டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா ஒட்டுமொத்தமாக 17 பதக்கங்களை வென்றுள்ளது.