மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் 2-ஆவது ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. ஏற்கெனவே ஒன் டே தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.