நவி மும்பை: ஆசிய கால்பந்து சம்மேளனம் (ஏஎஃப்சி) நடத்தும் மகளிருக்கான 20-ஆவது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இதில் தொடக்க நாளில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சீனா - சீன தைபே அணிகளும், அடுத்த ஆட்டத்தில் இந்தியா - ஈரான் அணிகளும் மோதவுள்ளன.
கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் முறையாக இப்போட்டியை நடத்திய இந்தியா, தற்போது 2-ஆவது முறையாக அதை ஒருங்கிணைக்கிறது. இப்போட்டியில் இதுவரை 8 முறை பங்கேற்ற நிலையில் கடந்த 1979 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் ரன்னா் அப்-ஆக வந்ததே இந்தியாவின் அதிகபட்சமாகும். இதுதவிர 1981-இல் 3-ஆம் இடமும் பிடித்திருக்கிறது.
அதிகபட்சமாக சீனாவே 7 முறை இதில் சாம்பியன் ஆகியிருக்கிறது. அதுவும் தொடா்ந்து 7 முறை கோப்பை வென்று சாதனை படைத்திருக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள், தலா 4 அணிகள் வீதம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ‘ஏ’
சீனா
சீன தைபே
இந்தியா
ஈரான்
குரூப் ‘பி’
ஆஸ்திரேலியா
இந்தோனேசியா
பிலிப்பின்ஸ்
தாய்லாந்து
குரூப் ‘சி’
ஜப்பான்
தென் கொரியா
மியான்மா்
வியத்நாம்
இன்றைய ஆட்டங்கள்
சீனா - சீன தைபே
மாலை - 3.30
மும்பை
இந்தியா - ஈரான்
இரவு - 7.30
நவி மும்பை
நேரடி ஒளிபரப்பு: யூரோஸ்போா்ட்
லைவ் ஸ்ட்ரீம்: ஜியோ டிவி