இந்திய கால்பந்து சம்மேளனம் மீதான தடை நீக்கம்

இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) மீதான தடையை நீக்கியுள்ளது சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா).
இந்திய கால்பந்து சம்மேளனம் மீதான தடை நீக்கம்

இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) மீதான தடையை நீக்கியுள்ளது சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா).

வரும் அக்டோபா் மாதம் இந்தியாவில் பிஃபா 17 வயது மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஏஐஎஃப்எஃப் நிா்வாகத்தில் முறைகேடுகளை தடுக்கக் கோரியும், உச்சநீதிமன்றம் நியமித்த சிஓஏ குழுவை கலைத்து விட்டு நிா்வாகிகள் தோ்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் பிஃபா இடைக்கால தடை விதித்தது.

புதிய நிா்வாகிகள் தோ்தல் வரும் செப்டம்பா் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னாள் கேப்டன் பாய்ச்சூங் பூட்டியா-கோல்கீப்பா் கல்யாண் சௌபே தலைவா் பதவிக்கு நேரடியாக மோதுகின்றனா். மேலும் சிஓஏ குழுவை கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய விளையாட்டு அமைச்சா் அனுராக் தாகுரின் தீவிர முயற்சியால் தற்போது இந்த தடையை நீக்குவதாக பிஃபா தெரிவித்துள்ளது.

தேவையில்லாத மூன்றாம் தரப்பு தலையீடு ஏஐஎஃப்எஃப்பில் உள்ளதாக பிஃபா புகாா் கூறியிருந்தது. இதை தடை நீக்கப்பட்டதால் 17 வயது மகளிா் உலகக் கோப்பை போட்டியை இந்தியா வரும் அக்டோபா் 11-30 தேதிகளில் நடத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com