ஆசியக் கோப்பை: பந்து வீச்சை தேர்வு செய்த இந்தியா, அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக்

ஆசியக் கோப்பையில் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 
ஆசியக் கோப்பை: பந்து வீச்சை தேர்வு செய்த இந்தியா, அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக்

ஆசியக் கோப்பையில் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசியக் கோப்பையில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.  இந்தப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 

இந்திய அணியில் இன்றையப் போட்டியில் ரிஷப் பந்த் இடம் பெறவில்லை. ஆவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடித்துள்ளார். 

இந்தியா:  ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான்:  பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஃபகர் சமான், இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஷதாப் கான், முகமது நவாஸ், ஆசிஃப் அலி, நசீம் ஷா, ஹரிஷ் ரௌஃப், ஷாநவாஸ் தானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com