இந்தியாவுடன் நடைபெற உள்ள 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து வங்கதேச வீரர் எபடோட் ஹூசைன் விலகியுள்ளார்.
காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹூசைன் 22ஆம் தேதி நடைபெறும் போட்டியில் விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி 22ஆம் தேதி தொடங்குகிறது.
ஏற்கெனவே காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து ரோஹித் சா்மா விலகியிருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணி கேப்டன் பொறுப்பேற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெற இந்தத் தொடா் மிக முக்கியமானதாகும்.
இதன் இரு ஆட்டங்களில் வெல்வதோடு, அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் 4 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி 22ஆம் தேதி தொடங்குகிறது.