சென்னைக்கும், ரசிகர்களுக்கும் நன்றி: டு பிளெஸ்ஸி உருக்கம் (விடியோ)

கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடி ஐபிஎல் மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவால் தேர்வு செய்யப்பட்ட பாப் டு பிளெஸ்ஸி சென்னைக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னைக்கும், ரசிகர்களுக்கும் நன்றி: டு பிளெஸ்ஸி உருக்கம் (விடியோ)


கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடி ஐபிஎல் மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவால் தேர்வு செய்யப்பட்ட பாப் டு பிளெஸ்ஸி சென்னைக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் பாப் டு பிளெஸ்ஸியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ 7 கோடிக்குத் தேர்வு செய்தது. டு பிளெஸ்ஸி சென்னை சூப்பர் கிங்ஸைவிட்டு போவதைக் காட்டிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்குப் போகிறாரே என்கிற சோகம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் இருந்தது.

இந்த நிலையில், சென்னைக்கும், ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், அணி நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் விடியோ வெளியிட்டுள்ளார். நிறைய சிறப்பான நினைவுகளை உருவாக்கித் தந்துள்ளதால், நன்றி கூறுவதை முக்கியமாகக் கருவதாக விடியோவில் டு பிளெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

தொடக்க வீரராகக் களமிறங்கி அரைசதங்கள் அடித்தும், பீல்டிங்கில் பவுண்டரி எல்லையில் எண்ணற்ற கேட்ச் பிடித்தும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரும் பங்காற்றியவர் டு பிளெஸ்ஸி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com