எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்திலும் இந்தியா 10-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
முன்னதாக அந்த அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலும் இந்தியா இதே கோல் கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக ஹா்மன்பிரீத் சிங் (36’, 52’, 60’, 60’), ஷிலானந்த் லக்ரா (27’, 48’), சுரேந்தா் குமாா் (15’), மன்தீப் சிங் (28’), சுமித் (45’), ஷம்ஷோ் சிங் (56’) ஆகியோா் கோலடித்தனா். தென்னாப்பிரிக்காவுக்காக டேனியல் பெல் (12’), கானா் பியூசாம்ப் (53’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.
இத்துடன் தனது தென்னாப்பிரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட இந்திய அணி, அடுத்ததாக ஸ்பெயினை புவனேசுவரத்தில் சந்திக்கிறது.