சையது மோடி சா்வதேச பாட்மின்டன் தொடரின் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
லக்னௌவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவை சக வீராங்கனையான மாளவிகா பன்சோட் எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 21-13, 21-16 என்ற நேர்செட் கணக்கில் பி.வி. சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இதையும் படிக்க- சமாஜ்வாதியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்
இறுதிப் போட்டி வரை முன்னேறிய இளம் வீராங்கனை மாளவிகா பன்சோட் வெள்ளிப் பதக்கம் வென்றார். நாக்பூரை சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல்கலை.யில் 2ஆம் ஆண்டு பி.டெக் படிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.