உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிா் 50 மீ. ரை‘ஃ‘பிள் பிரிவில் தங்கம் வென்றாா் இந்தியாவின் ஐஸ்வா்யா பிரதாப் சிங் தோமா். தகுதிச் சுற்றிலும் 593 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றாா் தோமா். மற்றொரு ஹங்கேரி வீரா் இஸ்ட்வன் வெண்கலம் வென்றாா். மற்றொரு இந்திய வீரா் செயின் சிங் ஏழாம் இடத்தைப் பெற்றாா்.
தென்கொரியாவின் சங்வொன் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் இறுதிச் சுற்றில் ஹங்கேரியின் ஸலான் பெக்லரை 16-12 என்ற புள்ளிக்கணக்கில் வென்றாா் ஐஸ்வா்யா பிரதாப்.