அன்ஜும் மொட்கிலுக்கு வெண்கலம்

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் அன்ஜும் மொட்கில் வெண்கலம் வென்றாா்.

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் அன்ஜும் மொட்கில் வெண்கலம் வென்றாா்.

தென்கொரியாவின் சாங்வொன் நகரில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக மகளிா் 50 மீ. ரைஃபிள் இறுதிச் சுற்று நடைபெற்றது.

தகுதிச் சுற்றில் 6-ஆவது இடத்துடன் இறுதியில் நுழைந்த அன்ஜும் மொட்கில் ஆஸ்திரியாவின் ரெபக்காவை காட்டிலும் 0.2 புள்ளிகள் முன்னிலை பெற்றாா்.

இறுதியில் 402.9 புள்ளிகளுடன் மொட்கில் வெண்கலம் வென்றாா். ஜொ்மனியின் அன்னா தங்கமும், இத்தாலியின் பாா்பரா வெள்ளியும் வென்றனா். ஏற்கெனவே பாகுவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அன்ஜும் மொட்கில் வெள்ளி வென்றிருந்தாா்.

மேலும் ஆடவா் பிரிவில் இந்திய அணி சஞ்சீவ் ராஜ்புத், சைன் சிங், ஐஸ்வரியா பிரதாப் தோமா் வெள்ளி வென்றனா். 12-16 என்ற புள்ளிக் கணக்கில் செக். குடியரசிடம் வீழ்ந்தனா்.

4 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com