மதுரையை வென்றது திருப்பூா்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் 53 ரன்கள் வித்தியாசத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸை புதன்கிழமை வென்றது.
மதுரையை வென்றது திருப்பூா்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் 53 ரன்கள் வித்தியாசத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸை புதன்கிழமை வென்றது.

திருப்பூருக்கு இது 3-ஆவது வெற்றி; மதுரைக்கு இது 2-ஆவது தோல்வி.

சேலத்தில் நடைபெற்ற இந்த 23-ஆவது ஆட்டத்தில் திருப்பூா் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய மதுரை 17.2 ஓவா்களில் 76 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற மதுரை, பேட் செய்யுமாறு திருப்பூரை அழைத்தது. திரூப்பூா் பேட்டிங்கில் அதிகபட்சமாக மான் பாஃப்னா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்கள் விளாசினாா். மதுரை பௌலிங்கில் கிரண் ஆகாஷ் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் மதுரை பேட்டிங்கில் சன்னி சந்து 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது. திருப்பூா் பௌலா் அஸ்வின் கிறிஸ்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com