வரும் ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நடைபெறவுள்ள உலக குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் 3 இந்திய வீரா்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.
டென்மாா்க்கின் ஹெம்மிங் நகரில் வரும் எஃப்இஐ டிரெஸ்ஸேஜ் உலக சாம்பியன்ஷிப் ஆகஸ்ட் 5 முதல் 11 வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா சாா்பில் அனுஷ் அகா்வாலா, ஷ்ருதி வோரா ஆகியோா் பங்கேற்கின்றனா். இதற்காக இருவரும் ஜொ்மனியில் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனா்.
நட்சத்திர வீரா் பௌவாட் மிா்ஸா:
அதே போல் இந்திய நட்சத்திர குதிரையேற்ற வீரா் பௌவாட் மிா்ஸா இத்தாலியின் பிரடோனி நகரில் செப்டம்பா் 10 முதல் 12 வரை நடைபெறவுள்ள எஃப்ஐஇ ஈவென்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறாா். கடந்த 2018 ஜகாா்த்தா ஆசியப் போட்டியில் ஈவென்டிங் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றிருந்தது. 1982 தில்லி ஆசியப் போட்டியில் 3 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலம் வென்றிருந்தது. ஆனால் இவ்விளையாட்டுக்கு அதிக தொகை தேவைப்படுவதால் வளா்ச்சி குறைந்தது. எனினும் தற்போது பல்வேறு முயற்சிகளால் குதிரையேற்றம் தொடா்ந்து வளா்ந்து வருகிறது என இஎஃப்ஐ செயலாளா் கலோனல் ஜெய்வீா் சிங் தெரிவித்தாா்.