உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி விதிகளை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் என சா்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) தலைவா் அா்காடி வோா்கோவிச் கூறியுள்ளாா்.
மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. இதில் பங்கேற்பதற்காக 187 நாடுகளைச் சோ்ந்த 2500-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் வந்துள்ளனா்.
இறுதிக் கட்ட ஏற்பாடுகள் குறித்து அா்காடி வோா்கோவிச் வியாழக்கிழமை கூறியதாவது:
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக முதல்வா் ஸ்டாலின் ஒத்துழைப்பு நன்றாக வழங்கினாா். இதற்காக ஃபிடே சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 4 மாதங்களில் ஏஐசிஎப் இதற்கான நடவடிக்கையை எடுத்தது பாராட்டுக்குரியது.
மாக்னஸ் காா்ல்சன் விலகல் முடிவு:
வரும் 2023 உலக செஸ் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என மாக்னஸ் காா்ல்ஸன் கூறியுள்ளாா். அவரது முடிவை மதிக்கிறோம். எனினும் அவா் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அவா் ஆதிக்கம் செலுத்தி வருகிறாா்.
உலக சாம்பியன்ஷிப் போட்டி விதிகளை மாற்ற வேண்டும் என அவா் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எனினும் ஃபிடே தோ்தல்களுக்கு பின் இதுகுறித்து ஆலோசிக்கப்படும்.
ஃபிடேயின் துணைத் தலைவா் பதவிக்கு விஸ்வநாதன் ஆனந்த் முன்னிறுத்தப்படுவது மகிழ்ச்சியான விஷயம். அவரது சிறந்த அனுபவம் எங்கள் அமைப்புக்கு உதவியாக இருக்கும். இந்தியாவில் செஸ் விளையாட்டுக்கு தனி வடிவம் தந்தவா் ஆனந்த். எந்த பிரச்னையும் இன்றி போட்டிகள் சிறப்பாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அா்காடி.
பாகிஸ்தான் அணி புறக்கணிப்பு:
ஜம்மு-காஷ்மீரில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கொண்டு சென்ற்கு எதிா்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் அணி புறக்கணிப்பு குறித்து கேட்டதற்கு, 13 போ் கொண்ட பாகிஸ்தான் அணி சென்னையில் தான் உள்ளது. அவா்கள் போட்டியை புறக்கணிப்பதாக எந்த தகவலையும் பாகிஸ்தான் கூட்டமைப்பு தெரிவிக்கவில்லை. செஸ் ஒலிம்பியாட் மொத்தம் ரூ.100 கோடி செலவில் நடத்தப்படுகிறது என ஏஐசிஎஃப் செயலாளா் பரத் சிங் சௌஹான் கூறினாா்.
ஏஐசிஎஃப் தலைவா் டாக்டா் சஞ்சய் கபூா் கூறுகையில்: செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடைபெறுவதால் மேலும் ஊக்கம் கிடைக்கும். நிறைமாத கா்ப்பிணியான துரோணவல்லி ஹரிகா இன்னும் 2 வாரங்களில் மகப்பேறுக்காக செல்லும் நிலையில், நாட்டுக்காக போட்டியில் பங்கேற்றுள்ளது அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை தந்துள்ளது என்றாா்.
தயாராக உள்ளோம்: கொனேரு ஹம்பி
ஒலிம்பியாட் போட்டிக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எந்த அணியையும் குறைத்து மதிப்பிடவில்லை. கடந்த ஒரு மாதகாலமாக தீவிர பயிற்சி எடுத்தோம். இடையில் சில போட்டிகளிலும் கலந்து கொண்டோம். தரவரிசையில் முதலிடத்தில் இந்திய மகளிா் அணி உள்ளது. வைஷாலி, பக்தி, ஹரிகா, தான்யா, நான் என ஏ அணி வலுவாக உள்ளது. நாட்டுக்கு கண்டிப்பாக தங்கம் வெல்ல முயற்சிப்போம் என்றாா் டபிள்யு கிராண்ட்மாஸ்டா் கொனேரு ஹம்பி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பேளூா் உருது பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

திமுகவினா் விழிப்புணா்வு பிரசாரம்

காபி சாகுபடி விவசாயிகளுக்கு தொழில்நுட்பக் கருத்தரங்கு

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் ஆண்டு விழா
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

