மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது. டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
இதையும் படிக்க- செஸ் ஒலிம்பியாட்: தமிழ்நாடு வீரர்கள் 3 பேர் வெற்றி
டிரினிடாட் பிரையன் லாரா மைதானத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பூரன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 11 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.