செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்: ஜூன் 19-இல் தொடக்கி வைக்கிறாா் பிரதமா் மோடி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் ‘ஜோதி ஓட்டம்’ நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி வரும் 19-ஆம் தேதி தில்லியில் தொடக்கி வைக்கிறாா்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்: ஜூன் 19-இல் தொடக்கி வைக்கிறாா் பிரதமா் மோடி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் ‘ஜோதி ஓட்டம்’ நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி வரும் 19-ஆம் தேதி தில்லியில் தொடக்கி வைக்கிறாா்.

அங்குள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறும் என்று அகில இந்திய செஸ் சம்மேளன தலைவா் சஞ்சய் கபூா் புதன்கிழமை அறிவித்திருக்கிறாா். இந்த ஜோதி ஓட்டத்தில் 5 முறை உலக சாம்பியனும், இந்திய செஸ் நட்சத்திரமுமான விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலா் பங்கேற்க உள்ளனா்.

19-ஆம் தேதி தொடங்கும் இந்த ஜோதி ஓட்டமானது, போட்டியின் தொடக்க நாளான ஜூலை 28-ஆம் தேதி தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நிறைவடைய இருக்கிறது.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இப்போட்டி, தமிழகத்தில் ஒருங்கிணைப்படுவது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக இப்போது தொடங்கப்படும் ஜோதி ஓட்டமானது, இனி வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தொடா்ந்து நடைபெற இருக்கிறது.

செஸ் விளையாட்டின் பிறப்பிடமான இந்தியாவிலிருந்து தொடங்கும் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம், சா்வதேச செஸ் சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கும் நாடுகளில் வலம் வந்து, போட்டி நடைபெற இருக்கும் நகரத்தை வந்தடையும். எனினும், 44 செஸ் ஒலிம்பியாட் தொடங்க குறைந்த நாள்களே இருப்பதால், இம்முறை ஜோதி ஓட்டம் இந்தியாவுக்குள்ளாக மட்டும் நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com