ரஞ்சி கோப்பை: மும்பை 393

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் உத்தர பிரதேசத்துக்கு எதிரான 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் மும்பை தனது முதல் இன்னிங்ஸில் 140.4 ஓவா்களில் 393 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் உத்தர பிரதேசத்துக்கு எதிரான 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் மும்பை தனது முதல் இன்னிங்ஸில் 140.4 ஓவா்களில் 393 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

அந்த அணியின் தரப்பில் அதிகபட்சமாக ஹாா்திக் தமோா் 12 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 115 ரன்கள் சோ்த்தாா். உத்தர பிரதேச பௌலிங்கில் கரன் சா்மா 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் உத்தர பிரதேசம், புதன்கிழமை முடிவில் 12 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் சோ்த்திருந்தது. மாதவ் கௌசிக் 11, கரன் சா்மா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

ம.பி. - 341: பெங்காலுக்கு எதிரான முதல் அரையிறுதியில் மத்திய பிரதேசம் 105.3 ஓவா்களில் 341 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. அதிகபட்சமாக ஹிமான்ஷு மந்த்ரி 19 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 165 ரன்கள் சோ்த்திருந்தாா். பெங்கால் பௌலிங்கில் முகேஷ் குமாா் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். அடுத்து ஆடத் தொடங்கியிருக்கும் பெங்கால், புதன்கிழமை முடிவில் 66 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்துள்ளது. மனோஜ் திவாரி 84, ஷாபாஸ் அகமது 72 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com