கடைசி டி20: இந்திய அணி பேட்டிங்

இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
கடைசி டி20: இந்திய அணி பேட்டிங்

இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இதனால், இன்று நடைபெறும் கடைசி மற்றும் 5வது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

இந்தப் போட்டியில் ரிஷப் பந்த தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது.

தென்னாப்பிரிக்காவில் கேப்டன் டெம்பா பவுமா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க அணியினை சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் வழிநடத்துகிறார். அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக டாஸின் போது அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com