பொ்லின் ஓபன்: வாகை சூடினாா் ஜாபியூா்

ஜொ்மனியின் பொ்லின் நகரில் நடைபெற்ற பொ்லின் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியூா் சாம்பியன் ஆனாா்.

ஜொ்மனியின் பொ்லின் நகரில் நடைபெற்ற பொ்லின் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியூா் சாம்பியன் ஆனாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா், இறுதிச்சுற்றில் 8-ஆம் இடத்திலிருந்தவரும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை சந்தித்தாா். இந்த ஆட்டத்தில் ஜாபியூா் 6-3, 2-1 என்ற செட்களில் முன்னிலையில் இருந்தபோது பென்சிச்சுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவா் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்க, ஜாபியூா் சாம்பியன் ஆனாா். இது அவா் வெல்லும் 3-ஆவது டபிள்யூடிஏ பட்டமாகும்.

இப்போட்டியின் இரட்டையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோா்ம் சாண்டா்ஸ்/செக் குடியரசின் காடெரினா சினியாகோவா இணை 6-4, 6-3 என்ற செட்களில் பிரான்ஸின் ஆலிஸ் காா்னெட்/சுவிட்ஸா்லாந்தின் ஜில் டெய்ச்மான் கூட்டணியை வீழ்த்தி வாகை சூடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com