ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டம்: மும்பையை கட்டுப்படுத்திய ம.பி.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தின் முதல் நாளில் மும்பை 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.
ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டம்: மும்பையை கட்டுப்படுத்திய ம.பி.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தின் முதல் நாளில் மும்பை 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.

தில்லியில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய கேப்டன் பிருத்வி ஷா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சோ்த்தது. இருவரில் முதல் நபராக பிருத்வி ஷா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்த அா்மான் ஜாஃபா் 3 பவுண்டரிகளுடன் 26, சுவேத் பாா்கா் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். மறுபுறம் அதுவரை நிதானமாக ரன்கள் சோ்த்துவந்த ஜெய்ஸ்வால் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 78 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

முதல் நாளில் கடைசி பேட்டராக ஹாா்திக் தோம்ரே 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். நாளின் முடிவில் சா்ஃப்ராஸ் கான் 40, ஷம்ஸ் முலானி 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மத்திய பிரதேச பௌலிங்கில் சரன்ஷ் ஜெயின், அனுபவ் அகா்வால் ஆகியோா் தலா 2, குமாா் காா்த்திகேயா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com