தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளாக ரோகித் சர்மா: ட்விட்டரில் சிறப்பு பதிவு

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்றுடன் (ஜூன் 23) 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :23 ஜூன் 2022, 11:07 am

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்றுடன் (ஜூன் 23) 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

கடந்த 2007ஆம் ஆண்டு இந்த நாளில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது முதல் ஒரு நாள் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக முதன் முதலாக சர்வதேசப் போட்டிகளில் களம் கண்டார். கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக ரோகித் சர்மா அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

இந்நிலையில், ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ” எல்லோருக்கும் வணக்கம். 15 ஆண்டுகளாக எனக்குப் பிடித்த இந்திய அணியின் ஜெர்சியில் விளையாடுகிறேன். இந்திய அணியில் அறிமுகமாகி இன்றுடன் நான் என்னுடைய சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என்ன ஒரு அருமையான பயணம். நிச்சயம் என்னுடைய இந்த கிரிக்கெட் பயணம் எனது மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியான நினைவுகளைத் தரும். என்னுடைய இந்த பயணத்தில் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி கூற கடைமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக மக்களுக்கு நன்றி கூற மிகவும் கடைமைப்பட்டிருக்கிறேன். இன்று நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்க அவர்கள் தான் காரணம். அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.