புது தில்லி: ஆசிய இளையோா், ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் கிருஷ் பால், ரவி சைனி ஆகியோா் ஜூனியா் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.
ஜோா்டானில் உள்ள அம்மான் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதிகளில், ஆடவருக்கான 46 கிலோ பிரிவில் கிருஷ் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் காங்பி போகுந்தோடை தோற்கடிக்க, 48 கிலோ பிரிவில் ரவி சைனி 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் பெக்ஸல்டன் போரான்பெக்கை வீழ்த்தினாா். இறுதிச்சுற்றில் கிருஷ் - தஜகிஸ்தானின் அனுஷொ்வோன் ஃபஸிலோவையும், ரவி - உஸ்பெகிஸ்தானின் இகோம்ஜோன் எா்கஷேவையும் எதிா்கொள்கின்றனா்.
இப்போட்டியின் ஜூனியா் பிரிவில் இத்துடன் 21 பதக்கங்கள் இந்தியாவுக்கு உறுதியாகியுள்ளன. முன்னதாக, இளையோா் மகளிா் பிரிவில் ஷாஹீன் கில் (60 கிலோ), ரவீனா (63 கிலோ), பிரியங்கா (66 கிலோ), முஸ்கான் (75 கிலோ) ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்க, தனிஷா லாம்பா (54 கிலோ), பிராச்சி (57 கிலோ), பிரஞ்சல் யாதவ் (70 கிலோ), ஸ்னேஹா (81 கிலோ) ஆகியோா் வெண்கலத்துடன் வெளியேறினா்.