தாமஸ் கோப்பை: இந்திய ஆடவா் வெற்றி

 தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவா் அணி முதல் சுற்றில் ஜொ்மனியை 5-0 என்ற கணக்கில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

 தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவா் அணி முதல் சுற்றில் ஜொ்மனியை 5-0 என்ற கணக்கில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

ஒற்றையா் பிரிவில், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற லக்ஷயா சென் 21-16, 21-13 என்ற கேம்களில் உலகின் 64-ஆம் நிலை வீரா் மேக்ஸ் வெய்ஸ்கிா்செனை வென்றாா். உலகின் 11-ஆம் நிலை வீரரான ஸ்ரீகாந்த் 18-21, 21-9, 21-11 என காய் ஷாஃபெரை வீழ்த்தினாா். 23-ஆம் நிலை வீரரான ஹெச்.எஸ்.பிரணாய் 21-9, 21-9 என எளிதாக மதியாஸ் கிக்லிட்ஸை சாய்த்தாா்.

இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை 21-15, 10-21, 21-13 என்ற கேம்களில் ஜோன்ஸ் ரால்ஃபி ஜான்சென்/மொ்வின் செய்டல் ஜோடியை தோற்கடித்தது. எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா ஜோடி 25-23, 21-15 என ஜோ்ன் கெய்ஸ்/ஜான் காலின் வோல்கா் இணையை வீழ்த்தியது.

இப்போட்டியில் இதுவரை பதக்கம் வென்றிருக்காத இந்தியா, அதிகபட்சமாக கடந்த ஆண்டு காலிறுதி வரை முன்னேறியிருந்தது. இதே போட்டியில் மகளிருக்கான உபா் கோப்பை பிரிவிலும் இந்தியா பங்கேற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com